×

புகையிலை விற்றவர்கள் கைது

திண்டுக்கல், ஜன. 7: திண்டுக்கல் தாலுகா காவல்நிலைய எஸ்ஐ பாலசுப்பிரமணி, சிறப்பு எஸ்ஐ சரவணன் மற்றும் போலீசார் இரண்டலை பாறை பகுதியில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். கிருஷ்ணன்(42), ஜெயக்குமார்(30) ஆகியோரின் கடைகளில் நடத்திய சோதனையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையிலிருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், கிருஷ்ணன் மற்றும் ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புகையிலை விற்றவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul Taluk Police Station ,SI Balasubramani ,Special ,SI ,Saravanan ,Anchalai ,Krishnan ,Jayakumar ,Dinakaran ,
× RELATED காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட...